Showing posts with label நாவல். Show all posts
Showing posts with label நாவல். Show all posts

Friday, May 16, 2014

"ஆ"மயம் 02





'ஆ'கு பெயர்

சில வருடங்களுக்கு முன்பு, சுஜாதா அவர்களின் நாவல்களை back to back வாசித்துக்கொண்டிருந்த சமயம், தேடித் தேடி அவரது நாவலை வாங்கிக்கொண்டிருந்தேன். அப்படி ஒருமுறை ஒரு நாவல் வாங்கி வந்து ஆர்வமாக படித்துக் கொண்டிருந்தேன்... அந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், நாவலின் தலைப்பை ஏதாவது ஒரு கதாபாத்திரம் உச்சரிப்பார்கள். அந்த தலைப்பு 'ஆ'...


அட்டகாசமான அமானுஷ்ய நாவல்... எனக்கு அந்த நாவலின் கதை பிடித்திருந்தாலும், மற்ற சுஜாதாவின் நாவல்களின் தலைப்பை தாண்டி இந்த நாவலின் தலைப்பு அப்படி பிடித்து போனது... 'ஆ'... இதைவிட ஒரு ஹாரர் கதைக்கு தலைப்பு வைக்க முடியுமா என்று தெரியவில்லை... தலைவர் எப்படி யோசித்தாரோ... அவரது ரசிகன் என்ற முறையில் தலைவர் சுஜாதாவிற்கு நன்றி... அந்த தலைப்பு, வெகுநாட்களாகவே என்னுள் ஒரு ஈர்ப்பை உண்டாக்கியிருந்தது... அம்புலியை தொடர்ந்து அடுத்த ஹாரர் கதை.. அதுவும், உலகில் உள்ள வெவ்வேறு ஊரில் நடக்கும் ஹாரர் என்று முடிவானதும்... நீண்ட நாட்களாகவே என் மனதிலிருந்த இந்த தலைப்பை எனது நண்பர் ஹரியிடமும் தயாரிப்பாளர் V. Loganathan அவர்களிடமும் கூற, ஒருமனதுடன், அனைவருக்கும் பிடித்துப்போய் 'ஆ' என்று வைத்துவிட்டோம்.

தயாரிப்பாளர் சங்கத்தில் இத்தலைப்பை பதிவு செய்ய முயன்ற போது ஏற்கனவே இதை வேறொரு கம்பெனியினர் பதிவு செய்து வைத்திருப்பதாக கூறவுஉம்... ஒரு வாரமாக யோசித்தும் வேறெந்த தலைப்பும் சிறப்பாக தோன்றவில்லை.. தோன்றியதும் 'ஆ' அளவிற்கு ஈர்க்கவில்லை.. பிறகு, அந்த முன்பதிவு செய்த கம்பெனிக்காரர்களிடமே பேசி... சம்மதிக்க வைத்து.. தலைப்பை பெற்றுக்கொண்டோம்...

டிஸ்கி : தலைப்பு மட்டுமே தலைவரின் நாவலிலிருந்து எடுக்கப்பட்டதே தவிர, அந்த கதைக்கும் இந்த திரைப்படத்தின் கதைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்... 


Signature

Monday, January 14, 2013

கல்கியின் 'மோகினித் தீவு' ஒலிப்புத்தகம்

நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைத் திருநாள் மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்...




நீண்ட நாளாகவே புத்தகங்களுக்கு ஒலிவடிவம் கொடுக்க வேண்டும் என்ற ஆவல், எனக்கும் எனது குழுவினருக்கும் எப்போதுமே உண்டு... எனவே, அதை தொடங்கி வைக்கும் முயற்சியில், "ஒலிப்பெட்டி" என்ற குழாமத்தை தொடங்கி, அதே பெயரில் ஒரு இணையதளத்தை ஆரம்பித்து... நல்ல புத்தகங்களை தேர்வு செய்து அதற்கு ஒலிவடிவம் கொடுக்கும் பணியை துவக்கியுள்ளோம்.



முதல் புத்தகமாக, கடந்த மாதம் 'ஐயப்பன் அருள்விளையாடல்' என்ற ஒரு ஆன்மீக புத்தகத்தை வெளியிட்டிருந்தோம். ஐயப்ப பக்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.



இதைத் தொடர்ந்து, எனக்கும் என் குழுவினருக்கும் எப்போதுமே பிடித்த அமரர் கல்கி அவர்களின் படைப்பில் 'மோகினித் தீவு' என்ற புத்தகத்தை ஒலிப்புத்தகமாய் ஒலிவடிவமைத்திருக்கிறோம். பின்னனியிசையுடன் சிறப்பு சப்தங்களுடன் கேட்கும்போது, கேட்பவர்கள் சரித்திர காலத்தில் அந்த காட்சிக்குள்ளேயே இருப்பது போன்ற உணர்வை கொடுக்கும்படியாக ஒலிநுட்பம் செய்துள்ளோம்.



இக்கதை 50 வருடத்திற்கு முன்பு எழுதியதுதானா என்று சந்தேகம் வருமளவிற்கு கல்கி அவர்களின் எழுத்துத்திறன் வழக்கம்போல் ஆச்சர்யப்படும்படி இருக்கிறது. சரித்திர நாவல்கள் எப்போதுமே கேட்பவர்களை அல்லது படிப்பவர்களை ஆர்வத்தில் கட்டிப்போடும்.. அப்படித்தான் இந்த கதையும் சுவாரஸ்யத்திற்கு எள்ளளவும் பஞ்சமில்லாமல், எங்கள் முயற்சி நல்லபடியாய் வெளிவர பெரிதும் கைகொடுத்துள்ளது.

சென்னை புத்தகக் கண்காட்சிக்குள் இதை வெளியிட வேண்டும் என்ற முயற்சியுடன் கடந்த மூன்று மாதமாய் உழைத்து வந்ததில் இதோ இப்போது விற்பனைக்கு தயாராய் உள்ளது.. தற்போது நடந்துக் கொண்டிருக்கும்  36ஆவது சென்னை புத்தக கண்காட்சியில் கிடைக்கும்படி ஏற்பாடுகள் செய்துள்ளோம்.

கண்காட்சியில் "மோகினித் தீவு" கிடைக்கும் ஸ்டால்கள் விவரம்
1. Softview (Stall #266)
2. Singa Rohini Trading Company (Stall #202, #203)
3. School ROM Multimedia (Stall #193)
4. புத்தகப் பூங்கா (Stall #137)

இன்னும் ஓரிரு தினங்களில் ஆன்லைனிலும் விற்பனைக்கு வந்துவிடும். கூடிய விரைவில் அந்த விவரங்களையும்... ஆடியோவின் சில பகுதிகளையும் பகிர்கிறேன்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Popular Posts