Showing posts with label திகில். Show all posts
Showing posts with label திகில். Show all posts

Friday, July 11, 2014

'ஆ'மயம் 17 - இன்று நள்ளிரவு 12 முதல் 'ஆ' ஆடியோ (SINGLES)


'ஆ'  ஒரு ஹாரர் படம் என்பதால்... Themeக்கு ஏற்றபடி சிங்கிள் ட்ராக் வெளியிட்டை வித்தியாசமாக நடத்த வேண்டும் என்று முடிவானதும்... எப்படி செய்யலாம் என்று ஆளுக்கொரு ஐடியாவை யோசித்து கொண்டிருந்தோம். அப்போது, எங்கள் மக்கள் தொடர்பாளர் திரு.சுரேஷ் சந்திரா அவர்கள் ஒரு அருமையான ஐடியாவை கூறினார். நள்ளிரவு 12 மணிக்கு பாட்டை FMல் ஒளிபரப்பலாம் என்றதும், எங்கள் அனைவருக்குள்ளும் 'அடடே' என்று ஒருமித்தமாக பல்பு எரிந்தது... அவர் ஐடியாவை கொடுத்ததோடு மட்டுமில்லாமல், அதை செயல்முறைப்படுத்த SURYAN FM-ல் பேசி ஏற்பாடு செய்தும் கொடுத்துவிட்டார்... அதன் பலனாய்.. இதோ இன்று நள்ளிரவு 12 மணிக்கு... பேய்களின் PEAK TIMEல் SINGLES BREAK...



இந்த சிங்கிள்ஸ் பாடலை பற்றி சில விவரங்கள்

'கண்ணாடிதான்டா..'  என்ற இந்த பாடலை எழுதி பாடியவர் 'கானா பாலா'... இன்றைய தேதிக்கு 'கானா பாலா'வை 'உள்ளூர் ஹனி சிங்' என்றே கூறலாம்... அந்தளவுக்கு அவர் சிங்கிள்ஸ் பாடலில்லாத தமிழ்ப்படமே இல்லை... ஆனால் 'ஆ' படத்தில் வழக்கமான காதல் கானாவாக இல்லாமல்... பத்து வருடம் கழித்து சந்திக்கும் பள்ளிக்கால நண்பர்களின் REUNION PARTYயில் பாடப்படும் GET-TOGHETHER GAANAவாக அமைத்திருக்கிறோம்... பள்ளிக்கால நினைவுகளை அலசும் பாடல்வரிகளை அற்புதமாக எழுதிக்கொடுத்து பாடியிருக்கிறார் கானா பாலா...



அடுத்த பதிவில் இந்த பாடல் பற்றிய கூடுதல் விவரங்களை பகிர்கிறேன்...

TRIVIA
கானா பாலா, இந்த பாடல் வரிகளை எழுதி முடித்ததும் தன் பள்ளி நண்பர்களை சந்திக்கும் ஆவல் மிகவும் ஏற்பட்டதாக கூறினார்... இதனால், ஃபோனில் இருக்கும் நம்பரை வைத்து மேலும் சில நம்பரை தேடிப்பிடித்து பள்ளி நண்பர்களோடு ஃபோனில் பேசியதாக கூறினார்...


Signature

Monday, July 07, 2014

'ஆ'மயம் 16 - டீசருக்குள்ளே ஒரு Surprise Gift

'ஆ'மயத்தில் ஜப்பான் படப்பிடிப்பு குறித்த சில சுவாரஸ்யமான அனுபவங்களை என் நினைவுகளுக்கு எட்டியவைர நினைத்து நினைத்து பகிர்ந்திருக்கிறேன்... இன்னும் ஓரிரு அத்தியாயங்களில் ஜப்பான் படப்பிடிப்பு அனுபவங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளது அதை தொடர்ந்து வேறு இடங்களில் நடந்த படப்பிடிப்பு அனுபவங்களை தொடர்கிறேன்... அதற்குமுன், 'ஆ' திரைப்படத்தின் டீசர் ட்ரெய்லர்.. இதோ உங்கள் பார்வைக்கு...


பார்வையாளர்கள் பணிவான கவனத்திற்கு... இந்த டீசர் ட்ரெய்லரை நன்றாக பாருங்கள்.. குறிப்பாக சொல்லப்போனால், ஸ்மார்ட் கண்களுடன் பாருங்கள்... அப்படி பார்ப்பவர்களுக்கு ஒரு சர்ப்ரைசான கிஃப்ட் காத்திருக்கிறது...

பார்த்துவிட்டு தவறாமல் உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.. இந்த டீசர் பிடித்திருந்தால்.. உங்களது வலைதளங்களிலும் பகிருங்கள்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Saturday, June 07, 2014

'ஆ'மயம் 08 - Video Blog Episode 01 : Tokyo Diary

'ஆ' திரைப்படத்தின் மேக்கிங் போது எடுத்த சின்ன சின்ன வீடியோக்கள், வீடியோ பதிவாய் இதோ உங்கள் பார்வைக்கு

Episode 01 - Tokyo Diary


அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Friday, June 06, 2014

'ஆ'மயம் 07 - ஆ கதைகள் 1, 2 & 3

டிஸ்கி : 'ஆ' ப்ரொமோஷனுக்காக எழுதப்பட்ட குட்டிக்கதைகள். இந்த கதைகளுக்கும், படத்தின் கதைக்கும் திகிலைத்தவிர எந்த சம்மந்தமும் கிடையாது...

ஏற்கனவே 'ஓர் இரவு' பப்ளிசிட்டியின் போது 'ஓர் இரவு கதைகள்' என்று குட்டி குட்டி ஹாரர் கதையை முயன்றிருந்தேன்... இருப்பினும்.. முயற்சிக்கு Expiry Date கிடையாது என்பதால்.. மீண்டும் அதே குட்டி குட்டி ஹாரர் கதை முயற்சி... இந்த 'ஆ' கதைகள்



கதை #01 : 666

பென்னி அன்று மிகவும் சந்தோஷமாய் இருந்தான்.. 6 மாதம் முன்பு புக் செய்திருந்த அவனது பைக் இன்று எந்த நிமிடமும் டெலிவரி செய்யப்படும்...

டைம் பார்த்தான்... 6 மணி அடிக்க இன்னும் 6 நிமிடம் இருந்தது...

நேரத்தை போக்குவதற்காக... FACEBOOK திறந்து பார்த்துக் கொண்டிருந்தான்... அதில் ஒரு ஹாரர் திரைப்படத்தின் புகைப்பட பகிர்வு இருந்தது. அதில், 666 என்ற சாத்தானின் எண் பற்றிய குறிப்புகள் இருந்தது... அந்த புகைப்படத்தை குறைந்தபட்சம் 6 பேருக்காவது பகிர வேண்டும் என்றும்.. இல்லாத பட்சத்தில்... அந்த சாத்தான் எண் பேய்வடிவம் கொண்டு இதை படிக்கும் நபரை ஆக்கிரமித்துக் கொள்ளும் என்றும்... எச்சரிக்கை இருந்தது... பென்னி சிரித்தான்... Close செய்தான்... திடீரென்று பின்னாலிருந்து டங் டங் என்ற கடிகார பெல்.. 6 முறை ஒலித்து அடங்கியது... பயத்துடன் திரும்பி கடிகாரத்தை பார்த்தான்... அதில் 666 என்றிருந்தது... '6 மணி',' 6ஆம் தேதி', '6 மணி' என்று தெரிந்தது... ஏதோ ஒரு வித பயுணர்வு அவனுள் உழன்றது... ஒரு சின்ன இடைவெளியில் தன்னைத்தானே சுதாரித்து கொண்டு மீண்டும் Facebookல் தனது GirlFriendடன் Chat செய்ய விரும்பி அவளுக்கு செய்தி அனுப்பினான்.. அப்போது, பின்னாலிருந்து காலிங் பெல் ஒலிக்கும் சத்தம் கேட்டது...

சந்தோஷத்துடன் ஓடி சென்று கதவை திறக்க... அவன் எதிர்ப்பார்த்து காத்திருந்த புது பைக் டெலிவரி ஆனது... அதை மகிழ்ச்சியுடன் சுற்றி சுற்றி பார்த்து சிலாகித்துக்கொண்டான்... முடிவாய் பென்னி பார்த்த ஒருவிஷயம் அவனை கலவரமடைய வைத்தது... அது... வண்டியின் நம்பர் ப்ளேட்... "TN 20 EV 6666" என்றிருந்தது...

பென்னி, "ஆஆஆஆஆஆஆஆஆஆஆ"

------------------------

கதை #02 ; பரிசு

அந்த மலைதேசத்து வளைவுப்பாதையில்... அடிக்கும் பேய்மழையை பொருட்படுத்தாமல் முகில்-ன் கார் வேகமாக போய்க்கொண்டிருந்தது...

காருக்குள் இயங்கும் ஏசி-யையும் தாண்டி முகில்-க்கு வியர்த்துக் கொண்டிருந்தது...

தனது மனைவிக்கு Surprise Birthday Giftஆக கொடுப்பதற்காக வாங்கிய அதே காரில், அவளது பிணத்தை ஏற்றி செல்வான் என்று அவன் எள்ளளவும் நினைத்து பார்க்கவில்லை...

என்ன செய்ய.. விதி... விளையாடியது..

பிறந்தநாளதுவுமாக அவளுக்கு கிஃப்ட் கொடுக்க surpriseஆக அவன் வீட்டுக்குள் நுழைய... அவளது துரோகம் கண்முன்னே... முகிலுக்கு தெரியவர... ஷண நேரத்தில் எல்லாம் நடந்து முடிந்தது...

விளைவு... பின்சீட்டில் அவள் பிணம்...

துரோகம்... ஆத்திரம்... ஏமாற்றம் என்று மாறி மாறி அவனுள் கோபம் பொங்கி கொண்டிருக்க... ஒரு ஓரமாய் அவள் மீது கொண்டிருந்த காதல் வலித்தது.. அவளை மிகவும் Miss செய்வதாய் உணர்ந்தான்... திடீரென்று அவன் மனதில் ஒரு Vibration... மொபைல் ஒலித்தது... வண்டி ஓட்டியபடி எடுத்து பார்த்தான்...

அவன் மனைவி நம்பரிலிருந்து... 'ONE SMS RECEIVED' என்று தெரிந்தது...

அவள் பிணத்தை காரில் புதைக்கும்போது... அவள் மொபைலையும் உள்ளே வைத்து கட்டியது நினைவுக்கு வந்தது... பிறகு எப்படி..?

குழப்பத்துடன் SMSஐ படித்தான்...

"MISS YOU TOO DARLING... JOINE ME" (தமிழாக்கம்... உன்னை பிரியமுடியாது கண்ணா... நீயும் என்னுடன் சேர்ந்துவிடு) என்றிருந்தது..

பயத்துடன் மெல்ல.. நிமிர்ந்து காரின் மேலிருக்கும் Rear View கண்ணாடியை பார்த்தான்

அதில் கோரமாய் அவன் மனைவியின் பிணம் அவனையே பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது

"ஆஆஆஆஆஆஆஆஆஆஆ"

------------------------

கதை #03 : எனக்கு பிடித்த புக் (மீள்பதிவு)

புத்தகங்களைவிட தூசி அதிகம் படிந்திருந்த அந்த பழைய புத்தக கடைக்குள் ரவி நுழைந்தான்...
வெகுநேரமாய் அங்குமிங்கும் தேடியபடி இருந்தவனை நோக்கி கடைக்காரர் வந்தார்...

ரவி அவனிடம், "ஏதாவது திகில் கதை நாவல் இருக்கா..?" என்று கேட்க

கடைக்காரன் ஒருவித மர்ம சிரிப்புடன் மேல் அலமாறியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து கொடுத்தான்

ரவி அதை ஆர்வத்துடன் பார்த்தபடி, 'இந்த புக்.. நல்லா திகிலா இருக்குமா..?"

கடைக்காரன், "நானே பலமுறை படிச்சி பயந்துருக்கேன் சார்.."

ரவி ஏளனமாக சிரித்தபடி "ஹாஹ்ஹா... அப்படியா.. அப்படி எத்தனைவாட்டி படிச்சி பயந்திருக்கீங்க..?" என்று கூற

"சாகுறதுக்கு முன்னாடி 4 தடவை.. செத்ததுக்கப்புறம் 3 தடவை படிச்சிருக்கேன்" என்று கூறியபடி வெளிச்சத்திற்கு வர, புத்தக கடைக்காரன் கண்கள் இருக்குமிடத்தில் வெற்றிடமாய் இருந்தது...

ரவி, "ஆஆஆஆஆஆஆஆஆஆஆ"

------------------------

(தொடரும்)

Image Courtesy : http://wilsonkhoo.wordpress.com


Signature

Wednesday, June 04, 2014

'ஆ'மயம் 06 - ஜப்பான்ல கூப்டாக


ஜப்பான் என்றதும் எனக்கு 'ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக..' என்ற கோவை சரளா அவர்களின் குரல்தான் நினைவுக்கு வரும்.. தமிழ் சினிமாவில் ஜப்பான் என்றால் கல்யாணராமன் படத்தில் .தெத்துப்பல்லோடு கமல்ஹாசன் கண்முன் தெரிவார்... ஹாரர் படம் என்று  வந்துவிட்டால் எனது டாப் 10 ஹாரர் பட வரிசையில் ரிங்கூ (பிறகு ஆங்கிலப்படமாக ரீமேக்கபட்ட The Ring) என்ற படம்  நினைவுக்கு வரும். அந்த படத்தை தொடர்ந்து நான் பார்த்த பல ஜப்பானிய ஹாரர் படங்கள் கண்முன் வந்து செல்லும். அப்படி ஹாலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்த J-Horror வகை படங்கள் எடுக்கப்பட்ட இடத்தில் நாமும் ஒரு ஹாரர் படத்தை எடுக்க வேண்டும் என்று செய்த முயற்சியின் விளைவாய் அமைந்தது எங்கள் ஜப்பான் பயணம்.  

'ஆ' படத்தின் ஒரு காட்சிப்படம்

இந்த முயற்சிக்கு எங்களுக்கு பெரிதும் உதவியாய் இருந்தவர் MSG Groups நிறுவனர் திரு.ஹரி நாராயண் அவர்கள். ஜப்பான் தமிழ் சங்கத்தின் சார்பாக இவர் ஏற்கனவே கோகுல்-ஐ வைத்து பல கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளார. இதனால், கோகுலின் ரசிகர்கள் ஜப்பானில் அதிகம். அதில் ஹரி சாரும் ஒருவர். அவர் கோகுல் ஹீரோவாக நடிக்கும் படம் என்பதால், அவரது வளர்ச்சிக்கு என்னால் முடிந்தமட்டும் உதவி செய்கிறேன் என்று கூறி.. சொல்லிய வண்ணம் செயல்படுத்தி காட்டினார். அவருக்கு இப்பதிவின் மூலம் எனது குழுவினர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடினமாக கிடைத்த ஜப்பான் படப்பிடிப்பு பர்மிஷன் மற்றும் விசாவிற்கு பிறகு, ஒரு நன்னாளில் ஜப்பானில் தரையிறங்கினோம்... அமைதியாக இயங்கும் ஏர்போட்டிலிருந்து வெளிவந்ததும் நண்பர் திரு.கௌரி ஷங்கர், திரு. முரளி, திரு. கார்த்திக் & விக்கி என்று ஜப்பானிய தமிழ் சங்க நண்பர்கள் எங்ளை குடும்பத்தினராய் பாவித்து வரவேற்றனர். அதுவும் கோகுலை கண்டதும், அவர்கள் குதூகலமடைந்து பேசி பழகியது, அவரது முந்தைய கலைநிகழ்ச்சிகளின் வெற்றியை பறைசாற்றியது.

அருமையான க்ளைமேட்டில் ஒரு சிறு பயணத்தில் எங்கள் தங்குமிடத்திற்கு வந்தடைந்தோம். நாங்கள் தங்கியிருந்த பில்டிங்-ன் பால்கனியிலிருந்து பார்த்தால் சீரான 'அராகாவா' நதியோட்டம் என்று ரம்யமான ஒரு சூழல். ஒரு பரபரப்பான சிட்டிக்கு நடுவே ஒரு அமைதியாய் ஓடும் ஆறு பார்க்க அவ்வளவு அழகு... ஒருவேளை சென்னையில் கூவம் சுத்தமாக இருந்தால் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று குழப்பத்தோடு அன்றிரவு உறங்கினேன்.

அடுத்த நாளிலிருந்து பரபரப்பாக எங்களது ஷூட்டிங் வேலைகளை துவக்க ஆரம்பித்தோம். ஷூட்டிங் நடத்த வேண்டிய இடங்கள், தேர்வு செய்திருந்த ஜப்பானிய நடிகர்களோடு சந்திப்பு.. அவர்களோடு கதையாலோசனை என்று எங்களது வேலை துவங்கியபோதும், நாங்கள் பயணப்பட்ட இடத்தில் ஜப்பானின் சில அதிசய பழக்கவழக்கங்களை காண நேரிட்டது.. அதில் முக்கியமாக பலர் சைக்கிள் ஓட்டி செல்வதை காண நேர்ந்தது.. கோட் சூட் என்று அணிந்து ஒரு ஆபிசராய் தெரியும் நபர் கூட, கூச்சப்படாமல்(?) சைக்கிள் ஓட்டி செல்கிறார்... சைக்கிள் ஜப்பானில் கொண்டாடப்படுவது தெரிந்தது... அவர்களின் இளமையான தோற்றத்திற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாய் இருக்க வேண்டும்.



நாங்கள் ஷூட்டிங்கிற்காக கேட்டிருந்த ஒரு ஹாஸ்பிடல் கடைசி நேரத்தில் பர்மிஷன் இல்லாமல் மறுக்கப்பட்டது. காரணம், ஒரே ஒரு கடைசி பேஷண்ட் இருக்கும்வரையிலும் அந்த ஹாஸ்பிட்டல் ஷூட்டிங்கிற்கு வழங்கப்படக்கூடாது என்று ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் என்றார்கள்...

(தொடரும்)



Signature

Tuesday, May 27, 2014

'ஆ'மயம் 05 - 'ஆ' படத்தின் DIGITAL MOTION POSTER


இந்த MOTION POSTER (MOSTER என்றும் சொல்கிறார்கள்) என்ற கான்செப்ட் சில வருடங்களுக்கு முன்பு TERMINATOR SALVATION என்ற படத்திற்கு செய்து வெளியிட்டிருந்தார்கள்.. (அதற்கு முன்பே பல படங்களுக்கு வந்திருந்தாலும் நான் முதலில் பார்த்தது இதுதான்) அது பார்த்த மாத்திரத்தில் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் உயிரோடு அசைவுடன் + இசையுடன் இருந்தால் எப்படியிருக்கும்.. அதுதான் மோஷன் போஸ்டர்கள்...

ஒரு படத்தின் டீசர் கொடுக்க வேண்டிய விளைவை கிட்டத்தட்ட இந்த மோஷன் போஸ்டர்கள் கொடுத்துவிடுகின்றது... ஒரு நாவலின் மிக சுவாரஸ்யமான வரிகளை கோடிட்டு காட்டுவது போல், ஒரு படத்தின் சரியான Mood-னை வெளிப்படுத்த.. இந்த மோஸ்டர்கள் உபயோகப்படுகின்றன...

வருங்காலங்களில் இது போன்ற மோஷன் போஸ்டர்கள் டிஜிட்டல் பேனர்களாய் பொது இடங்களில் மாட்டப்படலாம்.. அப்போது, பார்ப்பதற்கு 'ஹாரி பார்ட்டர்' படத்தில் வரும் அசையும் புகைப்படங்கள் சுவற்றில் மாட்டப்பட்டிருப்பதுபோல் தோன்றலாம்..

ஏற்கனவே அம்புலியில் இதை முயன்றிருந்தோம்.. தமிழில் வெகு சில படங்களுக்கே இந்த DMP (DIGITAL MOTION POSTER) வெளியானது... சட்டென நினைவுக்கு வருவது... ஏழாம் அறிவு, நண்பன், சமீபத்தில், விடியும்முன் போன்ற படங்களின் Motion Posters'தான்...

இதோ.. .'ஆ' படத்தின் முதல் Motion Poster.. படத்தின் தீம் மியூசிக்கின் பின்னனியுடன்...
#Aaaah Digital Motion Poster 001

'ஆ' படத்தில் வரும் ஐந்து கதைக்கும் தனித்தனியே மோஷன் போ்ஸ்டர் செய்து வெளியிட உத்தேசம்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Monday, May 26, 2014

"ஆ"மயம் 04 - அடுத்த படம் பற்றிய முன்னறிவிப்பு


'ஆ' படத்தை பற்றிய அறிவிப்பு வெளிவந்ததுமே, நண்பர்கள் சிலர், "முதல் படம் 'அம்புலி' அடுத்த படம் 'ஆ' என்று நீங்கள் அகரவரிசைப்படி தலைப்பு வைத்துவருகிறீர்கள்... சூப்பர்..." என்று வாழ்த்தினர்... அப்போதுதான், எங்களுக்கே தெரியாமல், அகர வரிசையில் எங்கள் படங்களின் தலைப்புகள் அமைந்திருப்பது தோன்றியது. ஆனால், உண்மையில் அகரவரிசைப்படி வைக்கவேண்டும் என்று வைக்கவில்லை.. காரணம், ஒரு படத்திற்கு தலைப்பு வைப்பது என்பதே ஒரு பெரிய வேலை... அதுவும், ஏற்கனவே தலைப்பு வைப்பதற்கு சில எழுதப்படாத விதிகள் சினிமாவில் உண்டு...

1. பாசிடிவ் டைட்டிலாக இருக்க வேண்டும்
2. கதைக்கு சம்மந்தப்பட்ட டைட்டிலாக இருக்க வேண்டும்
3. எல்லா வயது மக்களுக்கும் பிடிக்கும்படியும், வாயில் சுலபமாக நுழையும்படியும் இருக்க வேண்டும்
4. இதில் மூன்றெழுத்து, இரண்டெழுத்து... போன்ற Seasonal Sentiments
5. புரியும் வார்த்தையாக இருக்க வேண்டும்.. அப்படியில்லாமல் சங்க கால தமிழில் புரியாத வார்த்தையாக இருந்தால் அதற்கு தனியாக விளக்கம் கொடுத்து புரிய வைக்க மெனக்கெட வேண்டும்
6. ஏற்கனவே பலருக்கும் தெரிந்த அல்லது விளம்பரப்படங்களில் வந்த ஃபேமசாக சொற்றொடராக இருத்தல் நலம்...
7. கேளிக்கை வரிவிலக்கு கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தமிழில் இருக்க வேண்டும்... இது அனைவருக்கும் பொருந்தாது,  தமிழ்ப்பற்றாளர்கள் விதிவிலக்கு

மேற்கூறிய அனைத்தையும் கருத்தில் கொண்டு தலைப்பை தேடுவதற்குள் தலை சுக்குநூறாய் வெடித்துவிடும். இதில், அகர வரிசை என்ற வரையறைக்குள் சிக்கிக்கொண்டால், மேலும் கஷ்டமாகிவிடும் என்பதால், அடுத்த படத்திற்கு 'இ' என்ற முறையில் தலைப்பு அமையுமா என்று தெரியிவில்லை.. ஆனால், நிச்சயமாக 'இ' என்ற எழுத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது மட்டும் தெரிகிறது...

இதையெல்லாம் தாண்டி ஒரு கூடுதல் சமாச்சாரம் உண்டு, அதாவது, எனது முதல் 'அம்புலி' இல்லை... 'ஓர் இரவு' தான் (இந்த படத்திற்கு முதலில் 'இரா' என்று தலைப்பு வைத்து பிறகு 'ஓர் இரவு' என்று மாற்றியது தனிக்கதை)... 'ஓர் இரவு'-ஐ தொடர்ந்து அகரவரிசைப்படி வைத்திருந்தால், 'ஔ' எழுத்தில்தான் தலைப்பு வைத்திருக்க வேண்டும்... யோசித்து பாருங்கள் 'அம்புலி' படத்திற்கு 'ஔ'வில் தலைப்பு வைத்திருந்தால் என்ன வைத்திருக்க முடியும்.... இந்த எழுத்தில் ஏதாவது மாற்றுத்தலைப்பு தோன்றினால் பகிருங்கள்...

அன்புடன்
ஹரீஷ் நாராயண்


Signature

Tuesday, May 20, 2014

"ஆ"மயம் 03 - அதென்ன ஹாரர் ஆந்தாலஜி?


All time classic திருவிளையாடல் படத்தில் சிவபுராணக்கதைகளை ஔவை பாட்டி சொல்ல சொல்ல, ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனிக்கதையா வரும்... தருமியின் கதை ஒன்று, தட்சண் யாகம் நடத்திய கதை ஒன்று, ஹேமநாத பாகவதர் கதை ஒன்று, இப்படி பல கதைகள் வரும்... இதுதான் Anthology Film அல்லது Omnibus Film என்பார்கள்.




இது போன்ற கதைகூறும் பாணி நமது தமிழ் சினிமாவில் பெரும்பாலும் பக்திப்படங்களுக்கே இருந்து வந்தது... திருமால் பெருமை, கந்தன் கருணை, சரஸ்வதி சபதம் இப்படி பல படங்கள் உதாரணத்திற்கு கூறலாம். ஹாரரில் இதை முதல் முயற்சியாக செய்துள்ள படம்தான் 'ஆ'.

ஆந்தாலஜி என்ற வார்த்தைக்கு தமிழ்ச்சொல் என்ன என்று ஒரு நண்பர் கேட்டார்... உண்மையில் எனக்கும் தெரியவில்லை... யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து பகிருங்கள். ஆங்கிலத்தில் உள்ள வார்த்தையைத்தான் தமிழ்ப்படுத்த வேண்டும் என்று இல்லை.. அவர்களே OmniBus Film என்று புதுவார்த்தையில்தான் இதை alternateஆக கூறுகிறார்கள். எனவே, தமிழில் என்னவாக சொல்லலாம் என்று வல்லுனர்கள் பரிந்துரைத்தால், அவர்களுக்கு MY SINCERE THANKS.

பிறமொழிகளில் இந்த திரைக்கதைவடிவம் பலவாறு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளது. குறிப்பாக ஹாலிவுட்டில் 80களில் ஆந்தாலஜி ஹாரர் படங்கள் மிகவும் பிரபலம். ஹிந்தியில் Ram Gopal Varma ஆந்தாலஜி ஹாரர் படமான "Darna Mana Hai" என்ற படத்தின் மூலம் ஹாரர் ஆந்தாலஜிக்கு வித்திட்டார், அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனதும், அதன் இரண்டாம் பாகமாக "Darna Zaroori Hai" என்று வெளியிட்டார். அதுவும் ஹிட்.



அம்புலி 3D படத்திற்கு இயக்குநர் திரு.ஸ்ரீதரன் சாரை, எங்கள் கலையுலக ஆசானாக உணர்ந்து செயல்பட்டோம், அதுபோல் இப்படத்திற்கு எங்கள் ஆசான் இயக்குநர் திரு.A.P.நாகராஜன் அவர்கள்தான். காரணம், அவரது திரைப்படங்கள் அத்தனையும் ஒருவகையில் ஆந்தாஜியாகத்தான் இருக்கும். நவராத்திரி, நவரத்தினம், மேலே குறிப்பிட்ட பக்தி படங்கள் என்று பல படங்களில் இதே பாணியை கையாண்டு வெற்றிப்பெற்றவர் திரு.A.P.நாகராஜன் அவர்கள்.

Ace Film Director Mr. A. P. Nagarajan (ImageCourtesy thehindu.com)

பொதுவாக ஒரு படத்தை ஃபுல் மீல்ஸ் என்று கூறினால், ஆந்தாலஜியை வெரைட்டி மீல்ஸ் என்று கூறலாம். ஒவ்வொரு கதைக்கும் ஒவ்வொரு நாயகன், நாயகி, வில்லன், க்ளேமேக்ஸ் என்று கொண்டு போவதால், படம் விறுவிறுவென்று ஓடும்.. மேலும் படத்தில் நிறைய திருப்பங்கள், நிறைய சிறப்பம்ச காட்சிகளோடு திரைக்கதை வடிவமைக்கும் வசதி இந்த ஆந்தாலஜி படங்களில் உண்டு. 

50 ஓவர்கள் மேட்ச் பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் 20 ஓவர்கள் மேட்ச்சும் ஹிட் ஆனது போல், இந்த ஆந்தாலஜி பாணி படங்களும் ரசிகர்கள் மத்தியில் வெற்றிப்பெற்று ஆந்தாலஜி படங்கள் நிறைய வரும் என்ற நம்பிக்கையுடன் 'ஆ'வை உங்கள் முன் விரைவில் சமர்ப்பிக்கின்றோம். 


Signature

Friday, May 16, 2014

"ஆ"மயம் 02





'ஆ'கு பெயர்

சில வருடங்களுக்கு முன்பு, சுஜாதா அவர்களின் நாவல்களை back to back வாசித்துக்கொண்டிருந்த சமயம், தேடித் தேடி அவரது நாவலை வாங்கிக்கொண்டிருந்தேன். அப்படி ஒருமுறை ஒரு நாவல் வாங்கி வந்து ஆர்வமாக படித்துக் கொண்டிருந்தேன்... அந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்திலும், நாவலின் தலைப்பை ஏதாவது ஒரு கதாபாத்திரம் உச்சரிப்பார்கள். அந்த தலைப்பு 'ஆ'...


அட்டகாசமான அமானுஷ்ய நாவல்... எனக்கு அந்த நாவலின் கதை பிடித்திருந்தாலும், மற்ற சுஜாதாவின் நாவல்களின் தலைப்பை தாண்டி இந்த நாவலின் தலைப்பு அப்படி பிடித்து போனது... 'ஆ'... இதைவிட ஒரு ஹாரர் கதைக்கு தலைப்பு வைக்க முடியுமா என்று தெரியவில்லை... தலைவர் எப்படி யோசித்தாரோ... அவரது ரசிகன் என்ற முறையில் தலைவர் சுஜாதாவிற்கு நன்றி... அந்த தலைப்பு, வெகுநாட்களாகவே என்னுள் ஒரு ஈர்ப்பை உண்டாக்கியிருந்தது... அம்புலியை தொடர்ந்து அடுத்த ஹாரர் கதை.. அதுவும், உலகில் உள்ள வெவ்வேறு ஊரில் நடக்கும் ஹாரர் என்று முடிவானதும்... நீண்ட நாட்களாகவே என் மனதிலிருந்த இந்த தலைப்பை எனது நண்பர் ஹரியிடமும் தயாரிப்பாளர் V. Loganathan அவர்களிடமும் கூற, ஒருமனதுடன், அனைவருக்கும் பிடித்துப்போய் 'ஆ' என்று வைத்துவிட்டோம்.

தயாரிப்பாளர் சங்கத்தில் இத்தலைப்பை பதிவு செய்ய முயன்ற போது ஏற்கனவே இதை வேறொரு கம்பெனியினர் பதிவு செய்து வைத்திருப்பதாக கூறவுஉம்... ஒரு வாரமாக யோசித்தும் வேறெந்த தலைப்பும் சிறப்பாக தோன்றவில்லை.. தோன்றியதும் 'ஆ' அளவிற்கு ஈர்க்கவில்லை.. பிறகு, அந்த முன்பதிவு செய்த கம்பெனிக்காரர்களிடமே பேசி... சம்மதிக்க வைத்து.. தலைப்பை பெற்றுக்கொண்டோம்...

டிஸ்கி : தலைப்பு மட்டுமே தலைவரின் நாவலிலிருந்து எடுக்கப்பட்டதே தவிர, அந்த கதைக்கும் இந்த திரைப்படத்தின் கதைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்... 


Signature

Wednesday, May 14, 2014

"ஆ"மயம் 01



'ஆ' திரைப்படம் குறித்து வெளியான செய்திகளையடுத்து, நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்... மிக்க நன்றி..

குறிப்பாக வலையுலக நண்பர்களில், 'மெட்ராஸ்பவன்' சிவகுமார் முதலில் ஃபோன் செய்து வாழ்த்து தெரிவித்ததோடு படத்தை பற்றிய செய்தியை ஜில்மோரில் எழுதி வெளியிட்டார்... மேலும் அவர் கூறியபோதுதான் உண்மைத்தமிழன் அவர்கள் Tamilcinetalkல் ஏற்கனவே படத்தை பற்றி எழுதிவிட்டது தெரியவந்தது. அவருக்கும் நன்றி... நண்பர் ரஹீம் கஸாலி ஃபோன் செய்து வாழ்த்து தெரிவித்தார்.. அவரோடு ஏற்கனவே இத்திரைப்படத்தை குறித்து ஓர் இரவு ஃபோனில் பேசிக்கொண்டிருந்தேன்... கதைப்படி, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் அமானுஷ்ய அனுபவங்களை தொகுத்து திரைவடிவம் கொடுக்க வேண்டும் என்று முயற்சித்து கொண்டிருந்தபோது, மலேசியாவில் இந்த நம்பிக்கைகள் அதிகம் இருப்பதாக கேள்விப்பட்டேன், கஸாலி அவர்கள் ஏற்கனவே மலேசியாவில் வசித்தவர் என்பதால், அவருடன் கலந்தாலோசித்து கொண்டிருந்தேன். அந்த உரையாடல நடந்த நாட்களை அழகாய் நினைவுகூர்ந்தார்...

பிறகு, Bingleguy, என்ற நண்பர் எங்கள் குழுவின் நலன்விரும்பி வசந்தராமன் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்... படத்தின் பெயர்விளக்கத்தை பற்றி எழுதும்படியும் கேட்டுள்ளார்.. நிச்சயம் எழுதுகிறேன்...

மேலும் சில நண்பர்களிடமிருந்து, கேணிவனத்தை எப்போது திரைப்படமாக எடுப்பீர்கள் என்ற கேள்வியும் எழுந்தது... வழக்கம்போல், முயற்சிகளை கைவிடாமல் மேற்கொண்டு வருகிறேன்... இம்முறை பல வலையுலக நண்பர்கள், வலைப்பூவில் வாழ்த்தாமல், ஃபேஸ்புக்கிலும், வாட்சப்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்... ஃபேஸ்புக்கில் 'ஆ' படத்தை பற்றிய செய்திகளையும், புகைப்பட பகிர்வுகளையும் தெரிந்துக்கொள்ள உங்களை அன்போடு அழைக்கிறேன்...




இதுவரை நாளிதழ்களிலும், இணையத்திலும் வெளியான 'ஆ' பற்றி செய்திகளின் தொகுப்பினை இப்பதிவில் இணைத்துள்ளேன்...









Signature

Monday, May 31, 2010

'ஓர் இரவு' கதைகள் - 1






























Signature

Tuesday, February 09, 2010

HAIR PIN வளைவு - [சிறுகதை]



மலைப்பாதையில் மிதமான வெயிலில் மாலை நெருங்கிக் கொண்டிருக்க, ஹேர்பின் வளைவுகளில் அந்த Ford Fiesta கார் வளைந்துக் கொண்டிருந்தது. உள்ளே 3 பேர் இருந்தனர். அந்த மூவர் முகத்திலும் பணக்காரக்களை தெரிந்தது. தெரியாமல் எப்படி இருக்கும், சென்னையில் பெரிய ஏற்றுமதி இறக்குமதி கம்பெனியின் பார்ட்னர்ஸ் அல்லவா.

பின்சீட்டில் தனியாக ஜோஷ்வா அமர்ந்திருந்தான், "அதெப்படிடா ஒரு எலுமிச்சம்பழம் நம்ம பிரச்சினைய தீத்துடும். கேக்கவே சில்லியா இல்ல..." என்று ஆரம்பித்தான்.

டிரைவர் சீட்டுக்கு இடதுபக்கத்தில் அமர்ந்திருந்த ஸ்ரீதர் பதிலளித்தான் "ஹேய் நம்பிக்கை வைடா... வேலைய விட்டுட்டு இவ்வளவு தூரம் எஸ்டேட் பங்களாவுக்கு வந்து அந்த மந்திரவாதி சொன்னதை செஞ்சிட்டு திரும்பிட்டிருக்கோம்! இந்த நேரத்துல போய் இதெல்லாம் நடக்குமான்னு நம்பிக்கையில்லாம பேசிட்டிருக்கே..?"

வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த சூரஜ் இதையெல்லாம் கேட்டபடி "ஐ அக்ரீ வித் ஜோஷ்-டா, எனக்கும் இந்த எலுமிச்சம்பழம் மேட்டரெல்லாம் சுத்தப் பேத்தலாத்தான் தோணுது.."

"டேய் இதை நீ பேசாத, அன்னிக்கி குடிச்சிட்டு இதே மலைப்பாதையில அந்த பொண்ணு மேல காரை ஏத்துனப்ப யோசிச்சியிருக்கணும், உங்ககிட்டல்லாம் டிஸ்கஸ் பண்ணிட்டுத்தானே அந்த மந்திரவாதிகிட்ட போயிட்டு வந்தேன். இப்போ என்னமோ புதுசா கிளப்புறீங்க..? அதான் எல்லாம் செஞ்சாச்சுல்ல, இப்ப திரும்ப போகும் போது எந்த சர்ச்சையும் வேண்டாம். இனிமே ஒண்ணும் ஆகாது. பேசாம வண்டியை ஓட்டு.." என்று ஸ்ரீதர் கோபமாக கூற, சூரஜ் சிரித்துக் கொண்டான். ஸ்ரீதர் அவனை ஒருமுறை முறைத்துப் பார்த்தான்.

'அப்ப பிரச்சினைக்கு நான்தான் காரணம்னு சொல்றியா..?' என்று வண்டி ஓட்டியபடி சூரஜ் புலம்பினான்.

'நான் ஒண்ணுமே சொல்லலியே..?'

'நீங்களும்தானேடா குடிச்சியிருந்தீங்க..?', சூரஜ் கோவப்பட்டான்.

'டேய், நாங்க இந்த பிரச்சினைய உன்மேல ஏத்துறதா இருந்தா, இப்போ உங்கூட இவ்ளோதூரம் வந்து இந்த ரிஸ்க்கான வேலைய செஞ்சியிருக்க மாட்டோம்... எல்லாம் ஜோஷ்வாவுக்காகத்தான்... புரிஞ்சிக்கோ..!' என்று கூறி ஸ்ரீதர் வெளியில் வெறித்துக் கொண்டிருந்தான்.

ஜோஷ்வா, தனக்கு முன்சீட்டிலிருந்த ஸ்ரீதரின் தோளைத் தொட்டு 'தேங்க்ஸ்டா' என்றான்.

பிறகு மூவரும் அனைவரும் அமைதியாகவே இருந்தனர்.

மூவருக்குள்ளும், நடந்த நிகழ்வுகளின் மலரும் நினைவுகள் அவரவர் மனநிலைப்படி ஓடிக்கொண்டிருந்தது.

3 மாதத்திற்கு முன்பு...

கோடைவிடுமுறையை கழிக்க, மூவரும் காரில், எஸ்டேட் பங்களாவிற்கு செல்லும் இதே கொடைக்கானல் மலைப்பாதையில் இரவு நேரத்தில் ஏறிக்கொண்டிருந்தனர். குடி அதிகமாக இருந்ததால், சூரஜ் வண்டி கண்ட்ரோலை இழந்து, ரோட்டில் நடந்துப் போய்க்கொண்டிருந்த ஒரு மலைவாசிப் பெண்ணின் மீது வண்டியால் மோதிவிட்டான். அந்த பெண், கார் டயரில் சிக்கி அலறிய சத்தத்தை அந்த மலைப்பிரதேசம் எதிரொலித்தது.

பதறியபடி மூவரும் இறங்கி பார்க்க, அந்த பெண் இறந்திருந்தாள். அவள் முகம் விகாரமாக இருந்தது.

ஸ்ரீதர் கோபத்தில் கத்தினான், " F**K You சூரஜ், What have you doneடா..? Fool, அனாவசியமா ஒரு பொண்ணை கொண்ணுட்டியே..? நான் ட்ரைவ் பண்றேன்னு சொன்னேன்ல கேட்டியா..? இப்ப பாரு?'

சூரஜ் அலட்சியமாக, 'விட்றா, சரியா பாக்கலை, வேணும்னு யாராச்சும் செய்வாங்களா..?'

இருவர் முகத்தையும் மாறி மாறி பார்த்தபடி ஜோஷ் பயத்துடன், 'டேய், எனக்கு பயமா இருக்குடா, ப்... பொ... பொ... போலீஸ்ல சொல்லிடலாம்டா..' என்று புலம்பிக்கொண்டிருந்தான்.

'SHUT THE F**K UP... ஜெயிலுக்கு போற ஐடியா எனக்கில்ல, உனக்கு வேணும்னா நீ போ.. போ..?' என்று சூரஜ் ஜோஷ்வாவை திட்டினான்.

'ஹே சூரஜ் காம் டவுன்' என்று ஸ்ரீதர் இருவரையும் சமாதானப்படுத்தினான்.

அனைவரும் செய்வதறியாமல் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஜோஷ்வா ஐடியா கொடுத்தான், 'அப்ப ஒண்ணு பண்ணலாமா, இங்கதான் யாரும் இல்லியே, அப்படியே விட்டுட்டு போயிடலாம்..'

'ஸ்டுப்பிட், இந்த ரூட்ல மேல நம்ம பங்களா மட்டும்தான் இருக்கு, போலீஸ் ஆக்ஸிடெண்டடை விசாரிச்சாங்கன்னா வித்தவுட் டவுட் நாமதான் மாட்டுவோம்... ஸம்திங் எல்ஸ்?' என்று ஸ்ரீதர் யோசித்துக் கொண்டிருக்க

'பேசாம, இப்படியே இந்த பொண்ணை மலைப்பாதையில உருட்டி விட்டுடலாம்..' என்று சூரஜ் தன் பங்கிற்கு கூறினான்.

'நோ நோ... ஒண்ணு பண்ணலாம்... இவளை நம்ம ESTATE GARDENல புதைச்சிடுவோம்.. அங்கதான் யாருக்கும் டவுட் வராது, குயிக்' என்று ஸ்ரீதர் சொல்லியதைத் தொடர்ந்து, மூவரும் அந்த பெண்ணை கார் டிக்கியில் கிடத்தினார்கள், ஸ்ரீதர் காரிலிருந்து கொஞ்சம் பெட்ரோலை எடுத்து, ரோட்டில் படிந்திருந்த இரத்தக் கறையில் ஊற்றி, சிகரெட் லைட்டரால் பற்ற வைத்தான். ஒருமாதிரியான வாடை மூவர் வயிற்றையும் புரட்டியது. ஏற்கனவே குடித்திருந்த சூரஜ் வாந்தியெடுத்தான், பிறகு ஸ்ரீதர் கார் ஓட்ட, மூவரும் எஸ்டேட் பங்களாவிற்கு வந்தடைந்தார்கள்.

கார்டனில் கிட்டத்தட்ட 2 மணி நேரமாக குழி வெட்டினார்கள். ஜோஷ்வா அந்த பெண்ணை கார் டிக்கியிலிருந்து தூக்கிக் கொண்டு வரும்போது, அந்த பெண்ணின் உள்ளங்கை ஜோஷ்வாவின் முழங்கையை ஒருமுறை இறுக பிடித்தது.

'ஹ்ஹாஆஆஆஆ..', ஜோஷ் அலறியபடி பிணத்தை நழுவவிட்டு பங்களாவிற்குள் ஓடினான்.

பயந்தவன் என்பதால் அவனை புறக்கணித்துவிட்டு, ஸ்ரீதரும், சூரஜூம் அந்த பெண்ணை புதைத்து முடித்தனர்.

ஆனால் சென்னைக்கு திரும்பிய பிறகும் ஜோஷ்வாவின் மனநிலை பயங்கரமாக பாதிக்கப்பட்டிருந்தது. அவன் ஏதேதோ புலம்பிக்கொண்டிருந்தான். ஏதேதோ கண்ணுக்கு தெரிவதாக கூறினான். ஜூரம், பயம், இப்படி பல காரணங்களால் வியாபாரத்தில் அவனால் சரியாக ஈடுபட முடியவில்லை.

வேறு வழியின்றி ஸ்ரீதர் ஒரு முடிவெடுத்தான். ஜோஷ்வாவை சைக்கலாஜிக்கலி குணமடைய வைக்க வேண்டும், அதே சமயம் விஷயமும் வெளியில் தெரியக்கூடாது என்று யோசித்தவன். 2 நாள் விடுமுறை எடுத்துக் கொண்டான். கேரளாவிற்கு சென்று வந்ததாக பொய் கூறினான்.

கேரளாவிலிருந்து திரும்பியவனாக கையில் ஒரு எலுமிச்சம்பழத்துடன் வந்தான். கேரள மாந்த்ரீகர் இந்த எலுமிச்சம்பழத்தை அந்த பெண்ணை புதைத்த இடத்தில் புதைத்துவிட்டு, எக்காரணத்தைக் கொண்டும் திரும்பி பார்க்காமல் வர வேண்டும் என்று கூறியதாக புளுகினான்.

சூரஜ் மாந்த்ரீகத்தில் நம்பிக்கை இல்லாதவன் என்பதால் வர மறுத்தான். அவனை வரவழைப்பதற்காக அவனிடம் மட்டும், இது ஒரு பொய் நாடகம் என்றும் இதனால் ஜோஷ்வாவை குணமடைய வைக்க முடியும் என்றும் கூறியதால் சூரஜ்-உம், உடன் வர சம்மதித்தான்.

மூவரும் மீண்டும் கொடைக்கானல் பங்களாவிற்கு வந்து எலுமிச்சம்பழத்தை அந்த பெண்ணை புதைத்த குழியில் புதைத்துவிட்டு, திரும்பி பார்க்காமல் காரில் மலைப்பாதையில் இறங்கி கொண்டிருந்தனர்.

இப்படி நடந்த உண்மைகளை அவரவர்கள் மனதில் ஓடவிட்டபடியிருக்க...

'நான் உங்ககிட்ட ஒரு விஷயத்தை மறைச்சிட்டேன்..' என்று ஜோஷ்வா ஆரம்பித்தான்.

'என்ன..?'

'நான் அந்த பொண்ணை கார் டிக்கிலருந்து தூக்கிட்டு வரும்போது, அந்த பொண்ணோட உள்ளங்கை திடீர்னு என்னை பிடிச்சிது. அதனாலதான் நான் பயந்து போய் உள்ளே ஓடிட்டேன்..'

'அடப்பாவி, அப்படின்னா, நாம புதைக்கும்போது அந்த பொண்ணு உடம்புல உயிர் இருந்திருக்குமேடா, Why didn't you tell it, You fool?' என்று ஸ்ரீதர் கோபித்துக் கொண்டான்.

'சாரிடா..'

'ஹா ஹா... சரி விடு, இந்த மாதிரி எக்ஸ்பீரியென்ஸ்லாம் லைஃப்ல கிடைக்காது..' என்ற சூரஜ்ஜை ஸ்ரீதர் தலையில் தட்டினான்.

'ஓவ் ஓவ், அடிக்காதடா..?'

'ஹே ஜோஷ், இந்த விஷயங்களையெல்லாம் இனிமே நீ மறந்துடுவே பாறேன். அதான் அந்த மந்திரவாதி கொடுத்த எலுமிச்சம்பழத்தை புதைச்சிட்டோம்ல..? இனி பயமில்ல.. ஓகே..' என்று ஸ்ரீதர் தனது பொய்யை மெய்யாக்கிக் கொண்டிருந்தான்

'ஆமாமா... எல்லாம் அந்த மந்திரவாதி செயல்..' என்று சூரஜ் நக்கலாக கூற, ஜோஷ்வா உண்மையிலேயே தன் மனம் லேசடைவதை உணர்ந்தான்.

ஸ்ரீதர் டேஷ்போர்டிலிருந்து FILMFARE MAGAZINE எடுத்து படிக்க ஆரம்பித்தான்.

சூரஜ், ரியர் வியூ கண்ணாடியில் ஜோஷ்வாவை பார்த்தபடி, 'ஆனா ஜோஷ், you should be carefulடா, ஏன்னா, எலுமிச்சம்பழத்தை புதைச்சிட்டு திரும்பி பாக்காம வீடு வந்து சேரணும்னு அந்த மந்திரவாதி சொல்லியிருக்காரு... சோ எக்காரணத்துக்காகவும் திரும்பி மட்டும் பாத்துறாதே, ஓகே..?' என்று வேண்டுமென்றே பயமுறுத்தினான்.

ஸ்ரீதருக்கு இவனிடம் இந்த உண்மையை ஏன்தான் சொன்னோமோ என்றிருந்தது. ரியர் வியூ கண்ணாடியில் ஜோஷ்வாவின் முகத்தைப் பார்த்தான். அவன் மிகவும் பயந்திருந்தான்.

'ஹே ஜோஷ் பின்னாடி பாரேன் ஒரு வாட்டர் ஃபால்ஸ் எவ்வளவு அழகா தெரியுது..' என்று சூரஜ் கலாய்த்தான்... ஆனால் ஜோஷ் திரும்பாமல் இருந்தான்.

'சூரஜ் வேண்டாம் விளையாடாதே..' என்று ஸ்ரீதர் அவனை எச்சரித்தான்.

'ஜோஷ், Abovvvvve Turn' என்று ஸ்கவுட்-இல் கத்துவது போல் கத்தினான்.

இம்முறையும் ஜோஷ் அசரவில்லை. ஸ்ரீதர் புக் படித்துக் கொண்டிருக்க, வண்டி ஓரு ஹேர்பின் பெண்டில் அமைதியாக திரும்பிக் கொண்டிருந்தது. சூரஜ் மெலிதாய் சிரித்துக் கொண்டான். ஸ்ரீதர், அந்த புத்தகத்தில், Crossword Puzzle ஒன்றை கணித்துக் கொண்டிருந்தான்.

DOWN
13. RGV's horror flick starring rangeela girl (5)

B. H. O. O. T.


என்று அந்த புத்தகத்தில் எழுதிக் கொண்டிருக்க, சூரஜ் கத்தினான்.

'ஹே, ஜ்.. ஜோஷ், காருக்கு பின்னாடி அ..அ...அந்த பொண்ணு நின்னிட்டிருக்காடா..?' என்று கதறியபடி கூற ஜோஷ் சட்டென்று திரும்பிப் பார்த்தான்.

சூரஜ் பயங்கரமாக சிரித்தான், 'ஹா ஹாஹ்ஹா... Now I got you, நீ திரும்பி பாத்துட்டே.. ஹாஹ்ஹா..' என்று சிரித்துக் கொண்டான்.

ஸ்ரீதர் தனது புத்தகத்தால் சூரஜ்-ஐ போட்டு அடித்தான். 'உன்னையெல்லாம் வச்சிக்கிட்டு எந்த காரியத்தையும் பண்ண முடியாதுடா..'

'ஹே ஹே, ஸ்ரீ, ரிலாக்ஸ்... வலிக்குது...' என்று கூறி சிரித்தபடி வண்டி ஓட்டிக்கொண்டே பேசினான்.

'ஜோஷ், Sorryடா, JUST FOR FUNதான். பயப்படாதே, நான் சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன்' என்று சூரஜ் கூற, ஸ்ரீதரும் புத்தகத்தை மூடி வைத்தபடி 'Don't Worryடா, நாம ரொம்ப தூரம் திரும்பி வந்துட்டோம், இனிமே நீ திரும்பி பாத்தாலும் தப்பில்லை.. ஓகேவா' என்று கூறியபடி ஸ்ரீதர் ஃப்ரண்ட் சீட்டிலிருந்து திரும்பி ஜோஷ்வாவைப் பார்க்க, அங்கே...

அந்த மலைவாசிப்பெண் உட்கார்ந்திருந்தாள்...

அதே விகாரத்துடன்...

'ஆஆஆஆ...' என்று ஸ்ரீதர் அலற, அதே நேரம் வண்டி ஓட்டிக் கொண்டிருந்த சூரஜ்ஜூம் ரியர் வியூ மிரரில் பார்க்க, பின்சீட்டிலிருந்த அந்த மலைவாசிப்பெண் சூரஜ் மீது பாய்ந்தாள்.

வண்டி கண்ட்ரோல் இழந்து, மலைச்சரிவில் அடர்ந்த காட்டுக்குள் சரிந்து, கிடுகிடு பள்ளத்துக்குள் விழுந்தது...

ஸ்ரீதர் மெல்ல கண்விழித்தான்...

ஏடாகூடமான ஒரு பொசிஷனில் இருந்தபடி கை கால்களை இயக்க முடியாத நிலையில் இருந்தான்...

ஜோஷ்வாவும் சூரஜும் அருகில் இறந்திருந்தனர்...

உயரே உயரே தூரத்தில் ஒரே ஒரு வெள்ளை புள்ளியாக வெளிச்சம் தெரிந்தது. கார் விழுந்திருக்கும் பள்ளம் மிக ஆழமானது என்பதை ஸ்ரீதர் உணர்ந்தான். மாலை நேரம் நெருங்க நெருங்க, அந்த ஒரு புள்ளி வெளிச்சமும் மறைந்து கும்மிருட்டு சூழ்ந்தது.

அந்த இருட்டில் ஸ்ரீதரின் உயிர்துடிப்பு மட்டும் சத்தமாக கேட்டுக் கொண்டிருக்கிறது. ஸ்ரீதர் இன்னும் உயிருடன்தான் இருக்கிறான். முடிந்தால் சென்று அவனை காப்பாற்றுங்கள்...

Signature

Popular Posts