Wednesday, June 04, 2014

'ஆ'மயம் 06 - ஜப்பான்ல கூப்டாக


ஜப்பான் என்றதும் எனக்கு 'ஜப்பான்ல ஜாக்கிசான் கூப்டாக..' என்ற கோவை சரளா அவர்களின் குரல்தான் நினைவுக்கு வரும்.. தமிழ் சினிமாவில் ஜப்பான் என்றால் கல்யாணராமன் படத்தில் .தெத்துப்பல்லோடு கமல்ஹாசன் கண்முன் தெரிவார்... ஹாரர் படம் என்று  வந்துவிட்டால் எனது டாப் 10 ஹாரர் பட வரிசையில் ரிங்கூ (பிறகு ஆங்கிலப்படமாக ரீமேக்கபட்ட The Ring) என்ற படம்  நினைவுக்கு வரும். அந்த படத்தை தொடர்ந்து நான் பார்த்த பல ஜப்பானிய ஹாரர் படங்கள் கண்முன் வந்து செல்லும். அப்படி ஹாலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்த J-Horror வகை படங்கள் எடுக்கப்பட்ட இடத்தில் நாமும் ஒரு ஹாரர் படத்தை எடுக்க வேண்டும் என்று செய்த முயற்சியின் விளைவாய் அமைந்தது எங்கள் ஜப்பான் பயணம்.  

'ஆ' படத்தின் ஒரு காட்சிப்படம்

இந்த முயற்சிக்கு எங்களுக்கு பெரிதும் உதவியாய் இருந்தவர் MSG Groups நிறுவனர் திரு.ஹரி நாராயண் அவர்கள். ஜப்பான் தமிழ் சங்கத்தின் சார்பாக இவர் ஏற்கனவே கோகுல்-ஐ வைத்து பல கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளார. இதனால், கோகுலின் ரசிகர்கள் ஜப்பானில் அதிகம். அதில் ஹரி சாரும் ஒருவர். அவர் கோகுல் ஹீரோவாக நடிக்கும் படம் என்பதால், அவரது வளர்ச்சிக்கு என்னால் முடிந்தமட்டும் உதவி செய்கிறேன் என்று கூறி.. சொல்லிய வண்ணம் செயல்படுத்தி காட்டினார். அவருக்கு இப்பதிவின் மூலம் எனது குழுவினர்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடினமாக கிடைத்த ஜப்பான் படப்பிடிப்பு பர்மிஷன் மற்றும் விசாவிற்கு பிறகு, ஒரு நன்னாளில் ஜப்பானில் தரையிறங்கினோம்... அமைதியாக இயங்கும் ஏர்போட்டிலிருந்து வெளிவந்ததும் நண்பர் திரு.கௌரி ஷங்கர், திரு. முரளி, திரு. கார்த்திக் & விக்கி என்று ஜப்பானிய தமிழ் சங்க நண்பர்கள் எங்ளை குடும்பத்தினராய் பாவித்து வரவேற்றனர். அதுவும் கோகுலை கண்டதும், அவர்கள் குதூகலமடைந்து பேசி பழகியது, அவரது முந்தைய கலைநிகழ்ச்சிகளின் வெற்றியை பறைசாற்றியது.

அருமையான க்ளைமேட்டில் ஒரு சிறு பயணத்தில் எங்கள் தங்குமிடத்திற்கு வந்தடைந்தோம். நாங்கள் தங்கியிருந்த பில்டிங்-ன் பால்கனியிலிருந்து பார்த்தால் சீரான 'அராகாவா' நதியோட்டம் என்று ரம்யமான ஒரு சூழல். ஒரு பரபரப்பான சிட்டிக்கு நடுவே ஒரு அமைதியாய் ஓடும் ஆறு பார்க்க அவ்வளவு அழகு... ஒருவேளை சென்னையில் கூவம் சுத்தமாக இருந்தால் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று குழப்பத்தோடு அன்றிரவு உறங்கினேன்.

அடுத்த நாளிலிருந்து பரபரப்பாக எங்களது ஷூட்டிங் வேலைகளை துவக்க ஆரம்பித்தோம். ஷூட்டிங் நடத்த வேண்டிய இடங்கள், தேர்வு செய்திருந்த ஜப்பானிய நடிகர்களோடு சந்திப்பு.. அவர்களோடு கதையாலோசனை என்று எங்களது வேலை துவங்கியபோதும், நாங்கள் பயணப்பட்ட இடத்தில் ஜப்பானின் சில அதிசய பழக்கவழக்கங்களை காண நேரிட்டது.. அதில் முக்கியமாக பலர் சைக்கிள் ஓட்டி செல்வதை காண நேர்ந்தது.. கோட் சூட் என்று அணிந்து ஒரு ஆபிசராய் தெரியும் நபர் கூட, கூச்சப்படாமல்(?) சைக்கிள் ஓட்டி செல்கிறார்... சைக்கிள் ஜப்பானில் கொண்டாடப்படுவது தெரிந்தது... அவர்களின் இளமையான தோற்றத்திற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாய் இருக்க வேண்டும்.



நாங்கள் ஷூட்டிங்கிற்காக கேட்டிருந்த ஒரு ஹாஸ்பிடல் கடைசி நேரத்தில் பர்மிஷன் இல்லாமல் மறுக்கப்பட்டது. காரணம், ஒரே ஒரு கடைசி பேஷண்ட் இருக்கும்வரையிலும் அந்த ஹாஸ்பிட்டல் ஷூட்டிங்கிற்கு வழங்கப்படக்கூடாது என்று ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் என்றார்கள்...

(தொடரும்)



Signature

1 comment:

kalidasganesh said...

nammoril car ottuvathuthan miga bandavaga nam ninkirom athanalthan ennamo docotaridam adikadi visitor agivittom. cyclel sellum pazakkam nammorukkum vanthuvittal ennum nam arokkiyam nandraga erukkume

Popular Posts