Friday, April 23, 2010

நகுலன் துப்பறியும் - ஃபோட்டோ - [சிறுகதை]


 
7.30 மணி!

மாலையும் இரவும் சந்திக்கும் நேரம்..!

என் ஆபீஸ் கேன்டீனில், பெரிய சுவர் போன்ற கண்ணாடி ஜன்னலில், சென்னை நகரத்து டிராஃபிக்கில் சிக்கி, கலர் கலர் லைட்களில் மின்னியபடி ஊர்ந்து செல்லும் வண்டிகளை வேடிக்கை பார்த்தபடி, டிப்-டீ-யை குடித்துக் கொண்டிருந்தேன். அந்த கேன்டீனின் இரைச்சலிலும் ஒருவித அமைதி blend ஆவதை உணர்ந்துக் கொண்டிருந்தபோது, என் மாடர்ன் தியானத்தை கலைத்தபடி ஒரு குரல் கேட்டது...

'இப்ப நான் என்னங்க செய்றது..?'

'.....'

'சரி..'

'.....'

'நீங்க லீவ் போட்டுட்டு வரமுடியாதா..?'

'.....'

'ப்ச்... சரி... நானே பாத்துக்குறேன்..'

'.....'

குரலுக்கு உரியவர் எனது சக-ஊழியர்.... மிஸஸ். கீதா குமார்... அவரது கணவர் UKயில் வேலை செய்கிறார். அவரிடம்தான் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றியது.

ஃபோனை வைத்துவிட்டு, என் டேபிளில் எதிர்சேரில் வந்து சலிப்புடன் அமர்ந்தார்...

'என்ன கீதா... என்னாச்சுங்க..?'

'இல்ல சதீஷ்.. ஒரு புது மாதிரியான ப்ராப்ளம்..?'

'என்ன ப்ராப்ளம்னு நான் தெரிஞ்சிக்கலாமா..?'

'லாஸ்ட் வீக், வீட்ல, என் பையன் வினய்-யோட 7th பர்த்டே கொண்டாடினேன்ல..!'

'ஆமா..?'

'அந்த பங்ஷன்ல எடுத்த ஃபோட்டோஸை, என் ஃப்ரெண்ட்சுங்க எல்லாருக்கும் மெயில் பண்ணியிருந்தேன்..'

'சரி..!'

'அதுல என் ஃப்ரெண்டு ஒருத்தி, ஒரு அவுட் ஆஃப் போகஸ்ல விழுந்த ஒரு ஃபோட்டவைப் பாத்து, அதுல இருக்கிறது யாருன்னு கேட்டா..?'

'சரி..'

'ஆக்சுவலா.. அந்த ஃபோட்டோ, பார்ட்டிக்கு அடுத்த நாள் என் பையன் சும்மா வீட்டை சுத்தி சுத்தி எடுக்கும்போது க்ளிக் பண்ணியிருக்கான்..'

'அதனாலென்ன..?'

'அந்த ஃபோட்டோவுல யாரோ நிக்கிற மாதிரி ஒரு உருவம் விழுந்திருக்கு..'

'......'

' நோ இட் சவுண்ட்ஸ் ஸ்டுப்பிட்...! ஆனா, அந்த ஃபோட்டவுக்கான சரியான விளக்கத்தை என்னால சொல்லமுடியல... அந்த ஃப்ரெண்டு வேற, நிறைய திகில் நாவலா படிக்கிறவ, அவகிட்ட இந்த ஃபோட்டோ எடுத்த சிச்சுவேஷனை விளக்கி சொன்னதும், அது ஏதோ அமானுஷ்ய உருவம்தான்னு முரண்டு பிடிக்கிறா...!'

'இவ்வுளவுதானேங்க விஷயம்.. இதுக்கு போய் ஏன் ரொம்ப வேதனைப்படுறீங்க.. அது ஜஸ்ட் ஒரு இல்யூஷன் ஃபோட்டோன்னு விட்டுடவேண்டியதுதானே..?'

'இல்ல... என் ஃப்ரெண்டு சொன்னதை என்னால முழுசா மறுக்கமுடியல... கொஞ்சம் ஸ்பூகியாத்தான் இருக்கு... நம்புறதா வேண்டாமான்னு தெரியாம ஒரே குழப்பமா இருக்கு..'

'விடுங்க கீதா... ரொம்ப டென்ஷன் ஆகாதீங்க..?... கொஞ்சம் இருங்க வர்றேன்..' என்று எழுந்து சென்று, ஒரு டீ-யை வாங்கிக்கொண்டு வந்து அவரிடம் கொடுத்தேன்.

'தேங்க்ஸ் சதீஷ்..'

'இதைத்தான் உங்க ஹஸ்பெண்ட்கிட்ட சொல்லி அவரையும் டென்ஷன் படுத்திக்கிட்டிருக்கீங்களா..?'
'ஆமா.. எனக்கு வேற ஆப்ஷன் தெரியல...'

'அந்த ஃபோட்டோ இப்ப வச்சிருக்கீங்களா..?'

'இருக்கு' என்று கூறி தனது செல்ஃபோனை எடுத்து அதில் அந்த ஃபோட்டோவை காண்பித்தார்...

உண்மைதான், அந்த ஃபோட்டோவில், யாரோ ஒருவர் புகை உருவமாய் நிற்பதைப் போல் துல்லியமாகத் தெரிந்தது. அதுவும் ஒரு 3 வயது குழந்தை நின்று வெறித்துப் பார்ப்பதுபோல் கொஞ்சம் தெளிவாகவே தெரிந்தது. ஆனாலும், இன்னும் இந்த புகைப்படத்தை பெரிதாகப்பார்த்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது...

'இதைவிட பெரிய சைஸ்ல இல்லியா..?'

'என் மெயில்ல இருக்கு...'

'எனக்கு ஃபார்வெட் பண்ணிவிடுங்க... நான் இதுக்கு வேற ஒரு சொல்யூஷன் சொல்றேன்..'

'என்ன சொல்யூஷன்?' என்று கேட்டார்...

மனதில் எனது நண்பனும் அமானுஷ்ய ஆராய்ச்சியாளனுமான நகுலன்- நினைத்துக் கொண்டு 'முதல்ல அந்த ஃபோட்டவை அனுப்புங்க நான் சொல்றேன்...' என்றேன்.

- - - - - -

அடுத்த நாள்...

10 மணிக்கு  நகுலனுக்கு ஃபோன் செய்தேன்...

'சொல்றா சதீஷ்...?!'

'ஹே மச்சான், ஒரு ஹெல்ப்டா...?'


'அது எப்பவோ சரியாயிடுச்சுடா..'

'வேறென்ன பிரச்சினை..?'

'உன்னை நேர்ல மீட் பண்ணனும்...'

'அதான் சண்டே என் வீட்டுக்கு வர்றேன்னு சொன்னியே..?'

'அது வேற, கண்டிப்பா வர்றேன்... இது வேற ப்ராப்ளம்.. உன் ஃபீல்டுதான்'

'சரி, எங்க மீட் பண்லாம் சொல்லு..?'

'என் வீட்டுக்கு வர்றியா..'

'ம்ம்ம்... வேற எங்கேயாவது..?'

'சரி, அப்ப ஒண்ணு பண்ணு, என் ஆபீஸ்க்கு வந்துடு.. இங்கேயே ஃபுட் கோர்ட் இருக்கு.. மீட் பண்ணிக்கிலாம்...'

'ஓகே... உன் ஆஃபீஸ்ல எங்க இருக்கு..?'

சொன்னேன்...

'சரி... வந்துடுறேன்..'

- - - - - -

என் ஆபீஸின் டெரஸ்-இல் அமைந்திருந்த ஓபன் ஃபுட் கோர்ட்-ல் இருவரும் அமர்ந்துக் கொண்டிருந்தோம்....

நான் டீயும், நகுலன் டொமேட்டோ சூப்பும் குடித்துக்கொண்டிருந்தான்.

ஃபோட்டோ விஷயத்தை கூறி, அவனிடம் அந்த ஃபோட்டோவின் ப்ரிண்ட்அவுட்- காண்பித்தேன்.

சூப் குடித்துக்கொண்டே ரசனையுடன் ஆழ்ந்து அந்த புகைப்படத்தைப் பார்த்தான்.

அவன் மனதை படிக்க முடியாமல், 'வாட் டு யு திங்க்' என்று கேட்டேன்..?

'இந்த ஃபோட்டோ என்ன டைம் எடுத்தது..?'

மதியம் 3 மணியிருக்கும்னு கீதா சொன்னாங்க.

'இவங்க சன் பேரு என்ன சொன்னே..?'

'ம்ம்ம்... ஆங்.. வினய்..'

'நீ அந்த பையனோட பர்த்டே பார்ட்டிக்கு போயிருந்தியா?'

'இல்ல.. அப்போ ஷிஃப்ட் இருந்தது..'

'சரி, அவங்க இந்த ஃபோட்டோவைப் பார்த்து பயப்படறதுக்கு காரணம் என்ன..? மீன்... ஜஸ்ட் ஒரு ஃபோட்டோதானேன்னு விடாம ஏன் அவங்க டிஸ்டர்ப் ஆகுறாங்க..?' என்று கேட்டான்.

'மச்சான் பிரச்சினை என்ன தெரியுமா..? அவங்க அந்த வீட்டுக்கு சமீபத்துலதான் ஷிஃப்ட் ஆயிருக்காங்க.. இதுக்கு முன்னாடி அந்த வீட்ல, இந்த ஃபோட்டோவுல இருக்கிற மாதிரியே ஒரு 3 வயசு குழந்தை இருந்திருக்கு... அவங்க காலி பண்ணதுக்கப்புறம்தான் இவங்க இங்க குடியேறியிருக்காங்க..'

'ம்ம்ம்... ஸ்பூக்கி..' என்று மீண்டும் அந்த ஃபோட்டோவை பார்த்தபடி என்னிடம். 'டேய் இன்னொரு கப் சூப் சொல்லுடா..?' என்றான்.

என்ன இவன் சீரியஸாக இல்லாமல் சூப் கேட்கிறானே என்று சலிப்புடன் எழுந்து இன்னொரு கப் சூப் வாங்கி வந்தேன்.

குடித்துக்கொண்டே... 'இப்ப நீ ஃப்ரீயா..?' என்றான்.

'இல்ல... ப்ரேக்ல வந்திருக்கேன்.. எதுக்கு.?'

'நான் இந்த வீட்டுக்கு போய் இந்த ஃபோட்டோ எடுத்த இடத்தை பாக்கணும்' என்றான்

'டேய்... என்னால இப்ப வரமுடியாதுடா?' என்றேன்

'சரி, நீ வராத, எனக்கு அந்த வீட்டை பார்க்க ஏற்பாடு பண்ணு..'

'நான் ஃபோன் நம்பர் தர்றேன், இன்னிக்கி கீதா லீவ்லதான் இருக்காங்க... நீயே போய் பாரு.. நான் ஃபோன் பண்ணி பேசிடுறேன்' என்றான்.

'ஓகே..' என்று அருகில் இருந்த மினரல் வாட்டர் பாட்டல் எடுத்து ஒரே மடக்கில் முழு பாட்டிலையும் குடித்துமுடித்தான். நான் அவன் குடித்ததையே பார்த்துக் கொண்டிருத்தை கவனித்து என்னைப் பார்த்து, 'இது நான் அதிகமா குடிச்ச சூப்- டைல்யூட் பண்ணிடும்' என்று என்னிடம் கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

- - - - - -

நான் மீண்டும் ஆஃபீசில் உட்கார்ந்து வேலை செய்ய முயற்சித்துக்கொண்டிருந்தாலும், என் மனம் முழுவதும், நகுலன் என்ன மாதிரி இந்த கேஸை இன்வெஸ்டிகேட் செய்யப்போகிறான் என்று ஆவலாக இருந்தது. சிறு வயதில் நான் படித்த நாவல்களில் ஒவ்வொரு ஏரியாவாக சென்று, தடயங்களைத் தேடி, புதுப்புது மனிதர்களை சந்தித்து பேசும் கதாநாயகர்களை யூகித்து மலைத்திருக்கிறேன்.

ஆனால், அவர்களெல்லாம் க்ரைம் துப்பறிவாளர்கள். ஆனால், இவன் அமானுஷ்ய ஆராய்ச்சியாளன் என்பதுதான் நகுலனின் மீது எனக்கு அதிக ஈர்ப்பு வருவதற்கு காரணம். அதுமட்டுமன்றி, இவன் என் பள்ளி நண்பன். ஒரே பெஞ்ச்சில் அமர்ந்து இவனை நான் பார்த்திருக்கிறேன். இப்போது ஆளே ஸ்டைலாக மாறிவிட்டான். எப்படி திடீரென்று இப்படி ஒரு தொழிலுக்கு வந்தான். இவன் வாழ்வில் ஏதோ நடந்திருக்கிறது. என்னவென்று ஞாயிறன்று கேட்டுத் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

இப்படி நான் நகுலனை நினைத்துக் கொண்டு வெறுமனே மாணிட்டரை பார்த்துக் கொண்டிருக்க, என் செல்ஃபோன் ஒலித்தது.

நகுலன்தான்...

'சொல்லுடா..?'

'மச்சான் நான் அவங்க வீட்டுக்கு போய் பாத்தேன்..'

'என்ன ஆச்சு..?'

'அந்த ஃபோட்டோ எடுத்த ரூம்ல நான் சந்தேகப்பட்டமாதிரி, எதுவுமே இல்ல, நோ ரிஃப்ளக்ஷன், நோ ஃபோட்டோ ஃப்ளோஅப்ஸ்... இது வேற ஏதோன்னுதான் எனக்கும் தோணுது...'

'நானும் அப்படித்தான்டா நினைச்சேன்..'

'என்னன்னு நினைச்சே..?'

'இல்ல, அந்த ஃபோட்டோவுல இருக்கிற, அந்த 3 வயசு பையன், அந்த வீட்டை காலி பண்ணதுக்கு அப்புறம் இறந்திருப்பானோ, அவனோட ஸ்பிரிட் ஏதாவது, அங்க சுத்திக்கிட்டிருக்கோன்னுதான் தோணுது..' என்று எனது கணிப்பை கூறினேன்.

'ம்ம்... சேன்ஸஸ் இருக்கு..! இதுக்கு முன்னாடி அந்த வீட்ல குடியிருந்தவங்களோட அட்ரஸ் வாங்கியிருக்கேன். இப்போ அங்கதான் போயிட்டிருக்கேன்.. உனக்கு எப்ப ஆஃபீஸ் முடியும்..'

'டேய்.. எனக்கும் உங்கூட வரணும்போல இருக்குடா.. ஆனா, ஆஃபீஸ் எனக்கு 8மணிக்குதான் முடியும்..'

'ம்ம்... சரி, நானே போய் பாத்துட்டு வர்றேன்..' என்று ஃபோனை வைத்தான்.

- - - - - -

இரவு 10.45 மணிக்கு நானும் நகுலும் எனது ஃப்ளாட்டில் உட்கார்ந்திருந்தோம்.

டிவியில் க்ரிக்கெட் ஓடிக்கொண்டிருந்தது. நகுலன் ஆர்வமாக டிவியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

'டேய்.. நகுல்?'

'இருடா..! எதுவா இருந்தாலும் மேட்ச் முடிஞ்சதும் பேசுவோம்..' என்றான்.

சரிதான், இவனுக்கு க்ரிக்கெட் பேய் பிடித்திருக்கிறதுபோல என்று நினைத்து அமைதிகாத்தேன். எனக்கும் க்ரிக்கெட் பிடிக்கும்தான், ஆனால், ரொம்ப தீவிர ரசிகனெல்லாம் கிடையாது. பள்ளிநாட்களில் தீவிரமாக ஆடியதோடு சரி... இப்போது தூரத்திலிருந்து ஆதரவு மட்டும் கொடுத்து வருகிறேன்.

சில நிமிடங்களில் மேட்ச் முடிந்ததும், என் பக்கம் திரும்பினான்.

'என்னடா, நீ இன்னிக்கு என்ன இன்வெஸ்டிகேட் பண்ணேன்னு கேட்கலாம்னு பாத்தா, இப்படி மேட்ச் பாத்துக்கிட்டு உட்கார்ந்துட்டே..?'

'ஹே! கூல் டவுன்! ரிசல்ட் சொல்றதுக்காகத்தானே இங்க வந்திருக்கேன்... ஏன் இப்படி அவசரப்படுறே..?'

'இல்லடா... ஒரு ஆவல்தான்’

‘என்ன ஆவல்..?’

உன் லைஃப்ஸ்டைல் எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்குடா.. எனக்கும் உன்கூட இன்வெஸ்டிகேஷன்ல கூட வரணும்னு ஆசையா இருக்கு..'

'அப்ப ஒண்ணு பண்ணு, எனக்கு அஸிஸ்டெண்ட்டா வந்து ஜாய்ன் பண்ணிக்கோ... ஓகேவா..?' என்று சிரித்தபடி கேட்டான்.

'வேலையை விட்டுட்டு... இப்ப...' என்று இழுத்தேன்.

'சும்மாதான் கேட்டேன்... விடு.. இன்னிக்கு மிஸஸ்.கீதா குமாரோட வீட்டுக்கு போய் ஃபோட்டோ எடுத்த அறைக்குள்ள EMF மீட்டர் வச்சி செக் பண்ணிப் பாத்தேன்..'

'EMF மீட்டர்னா..?'

'எலக்ட்ரோ மேக்னடிக் ஃபீல்டு மீட்டர்... இதை GHOSTMETERனும் சொல்லுவாங்க..'

'சரி.. இதை வச்சி அந்த இடத்துல என்ன பண்ணே..?'

'அந்த இடத்துல எதாவது ஹாண்டிங்கா இருந்தா, ரீடிங் தாறுமாறா ஏறும் இறங்கும். ஆனா அந்த ரூம் ரொம்பவும் நார்மலாத்தான் இருந்தது.'

'சரி, காலிபண்ணிட்டுப் போன அந்த 3 வயசுப் பையனோட ஃபேமிலியை மீட் பண்ணப் போனியே என்னாச்சு..?' என்று நான் ஆர்வமாக கேட்டுக்கொண்டிருக்க, எனது ஃப்ளாட்டில் திடீரென்று கரண்ட் கட் ஆனது... என் ஏரியாவில் இது சகஜம். அடிக்கடி ஒரு 15 நிமிடத்திற்கு பவர் கட் செய்துக் கொண்டே இருப்பார்கள்.

'இருடா, நான் போய் கேண்டில் எடுத்துட்டு வர்றேன்..'

'வெளியில பால்கனியில உட்கார்ந்துப்போமா..?'

'இல்லடா, இங்க ஈவினிங்ல கொசுத்தொல்லை அதிகம். சோ... ஒரு 15 மினிட்ஸ் உள்ளவே உக்காந்திருப்போம்..' என்றேன். நல்லவேளையாக ஏஸி இவ்வளவு நேரம் ஓடிக்கொண்டிருந்ததால் ரூம் சற்று ஜில்லென்றே இருந்தது. புழுக்கமில்லை..

கேண்டில் ஒலியில் இருவரும் என் அறையில் அமர்ந்திருக்க, நகுலன் அந்த புகைப்பட மர்மத்தை விளக்க ஆர்ம்பித்தான்.

'சதீஷ்...! அந்த புகைப்படத்துல இருக்கிறது ஆவிதான்.' என்று நகுலன் கூற, எனக்கு கொஞ்சம் கிலியாக இருந்தது.

'அப்படின்னா அந்த 3 வயசுப்பையன் இறந்துட்டானா..?'

'இல்ல.. உயிரோடத்தான் இருக்கான்!'

'என்னடா குழப்புறே..?'

'அந்த ஃபோட்டோவுல விழுந்திருக்குற உருவம் ஒரு ஆவிதான் ஆனா, அது உயிரோட இருக்கிற ஒரு குழந்தையோட ஆவி..'

'உயிரோட இருந்தா எப்படிடா ஆவியாகமுடியும்..'
'முடியும்..'

'இதை ஆஸ்ட்ரல் ப்ரொஜெக்ஷன்-னு சொல்வாங்க..'

'அப்படின்னா..?' என்று கேட்டேன்

'ஒரு இடத்துல இருந்துக்கிட்டு, நம்ம ஆன்மா மட்டும் வேற இடத்துக்கு ட்ராவல் பண்ணும். ஆனா, இப்படி டிராவல் பண்ற ஆன்மாக்களை பெரும்பாலும் யாராலயும் பாக்க முடியாது. யாராவது ஒருசிலர் மட்டும் இதை உணருவாங்க. அதுவும், இந்த ஆற்றல் பெரிய பெரிய யோகிகளுக்கு மட்டுமே வசப்படும்.'

'சரி, பெரிய பெரிய ஞானிகளுக்கு மட்டுமே சாத்தியப்படுற இந்த ஆஸ்ட்ரல் ப்ரொஜெக்ஷன் 3 வயசு குழந்தைக்கு எப்படி தெரிஞ்சிருக்கும்..?'

'குழந்தைக்குத்தான் எல்லாமே தெரியும்.. ஆனா, அந்த குழந்தை வளர வளர அது தனக்கு தெரியாதுன்னு நம்ப ஆரம்பிச்சிடுது..' என்று கூறினான். எனக்கு புரிந்ததுபோலும், புரியாததுபோலும் இருந்தது. கேண்டில் ஒளியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

'மச்சான் சாரி, கொஞ்சம் புரியும்படியா சொல்லுடா..?' என்று கேட்டேன்.

'சொல்றேன்... ஒரு குழந்தை தனக்கு பசிக்குதுங்கிறதை தன் தாய்க்கு தெரிவிக்கும்...! எப்படி..? மொழிமூலமாயில்லாம எண்ண அலைகள் மூலமா தெரிவிக்கும். தாயும், தன் குழந்தையப் பத்தியே யோசிச்சிக்கிட்டிருக்கிறதால, அந்த குழந்தை எண்ண ட்ரான்ஸ்மிட் பண்ணுதுன்னு அவங்களும் புரிஞ்சிக்கிட்டு குழந்தைக்கும் உணவு கொடுப்பாங்க... இதைத்தான் ஸ்பிரிச்சுவல் சைன்ஸ்ல டெலிபதின்னு சொல்றோம். ஆனா, அதே குழந்தை வளர்ந்து ஏதாவது ஒரு மொழியை கத்துக்கிட்டதும், எண்ண அலைகள் மூலமா தாய்கிட்ட பேசுறதை மறந்துட்டு மொழியில பேச ஆரம்பிச்சுடுது. டெலிபதின்னா என்னன்னு கேட்கும்'

'சரி..?'

'அதே மாதிரிதான், ஒருத்தர் தியானத்துல இருந்தபடி ஆஸ்ட்ரல் பாடியில டிராவல் பண்ற மாதிரி, அந்த 3 வயசுக் குழந்தை தூங்கும்போது, சர்வசாதாரணமா தான் வாழ்ந்து வளர்ந்துட்டிருந்த அந்த பழைய வீட்டுக்கு தேடி வந்திருக்கு... அப்போ அங்க ஃபோட்டோ எடுத்து விளையாடிக்கிட்டு இருந்த வினய் எடுத்த புகைப்படத்துல சிக்கிடுச்சு..'

'தூங்கும்போதுகூட இப்படி ஆவியா வரமுடியுமா..?'

'ஏன் முடியாது..? குழந்தைங்க தூங்கிறதை பாத்திருக்கியா... தெளிவான தூக்கம், கடன் தொல்லையில்ல... கேர்ள் ஃப்ரெண்டு நினைப்பில்ல... கடவுள் நினைப்பில்ல... இதுவே ஒருமாதிரி தியானம்தான்டா... குழந்தைங்க மட்டுமில்ல, கோமாவுல இருக்கிற சிலரோட ஆவியும் அங்கங்க உலாத்துனதா நான் கோர்ஸ் படிக்கும்போது சில விஷயங்களை கேள்விப்பட்டிருக்கேன். இந்த கேஸிலும் அந்தமாதிரிதான் நடந்திருக்கு..'

‘என்னது கோமாவுல இருக்கிறவங்களோட ஆவியா..?’

‘ஆமா... தேடிப்பாரு... இந்த இன்ஸிடெண்ட்ஸ் ரெக்கார்டாயிருக்கு..’

'சரி பாக்குறேன்... அப்போக்கூட அந்த ஆவி ஃபோட்டோவுல எப்படி விழுந்திருக்கும்..'

'நான் ஏற்கனவே சொன்னமாதிரி இது எல்லாரோட கண்ணுக்கும் தெரியாது... சில ரேர் கோ-இன்ஸிடென்ஸ்ல சிலரோட கண்ணுக்கு சிக்கும்..'

'அந்தமாதிரி அந்த வினய் கண்ணுக்கு சிக்கியிருக்குங்கிறியா..?'

'இல்ல... அவன் கையில இருந்த கேமிராவோட லென்சுக்கு சிக்கியிருக்கு.. நம்புறதுக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும்... ஏன் தெரியுமா..?'

'ஏன்..?'

'ஏன்னா நீயும் வளந்துட்டே..! உனக்குள்ள இருக்கிற சக்தியை மறந்துட்டே... அடுத்தவங்கிட்ட இருக்குன்னாலும் உன்னால நம்பமுடியாது... But nothing to worry about that photo சதீஷ்... நாளைக்கு காலையில, உங்கிட்ட சொன்னதையெல்லாம் இமெயில்ல என் ரிப்போர்ட்டா அனுப்புறேன்.. மிஸஸ்.கீதா குமார்-கிட்ட கொடுத்துடு..' என்று கூறிமுடித்து கிளம்புவதற்காக எழுந்தான்.

கரண்ட் இன்னும் வரவில்லை...

'இங்கேயே ஸ்டே பண்ணிட்டு காலையில போயிடேன்.. எதுக்கு நைட் டைம்ல வண்டி ஓட்டிட்டு போறே..?'

'இல்லை, எனக்கு சென்னையில நைட் டிரைவிங் ரொம்ப பிடிக்கும்.. நான் கிளம்புறேன்.. சண்டே வீட்டுக்கு வா' என்று கிளம்பினான். போவதற்கு முன் தனது பேக்-இலிருந்து ஒரு ஸ்மைலி பால் எடுத்து கொடுத்தான்.

'இதை அந்த வினய் கிட்ட கொடுத்துடு..'

'புரியுது.. நீ கேஸ் கம்ப்ளீட் பண்ணதுக்கு அடையாளமா, உன் சிக்னேச்சர்தானே..?' என்றேன்... பதில் கூறாமல் சிரித்துக்கொண்டே கிளம்பினான்.

- முடிந்தது ஆனால் தொடரும் -


Signature

16 comments:

எல் கே said...

interesting writing harish

DREAMER said...

ThanX friend...

இடிச்சபுளி said...

Waiting buddy !!!

Ananya Mahadevan said...

ரொம்ப வித்தியாசமா இருந்தது ஹரீஷ், ஒத்துக்கற மாதிரியும் இருக்கு நகுலன் சொல்ற விஷயங்கள். :) வாழ்த்துக்கள். தொடருங்கள்.

Raghu said...

ஹ‌ரீஷ், நான் ஒண்ணு சொல்றேன், கொஞ்ச‌ம் மிகைப்ப‌டுத்தி பேச‌றேன்னு கூட‌ நீங்க‌ நினைக்க‌லாம்.....ஷெர்ல‌க் ஹோம்ஸ்-டாக்ட‌ர் வாட்ஸ‌ன், க‌ணேஷ்-வ‌ஸ‌ந்த் போல‌ ந‌குல‌ன்-ச‌தீஷ் அருமையா செட்டாகுறாங்க‌. இதை அப்ப‌டியே தொட‌ருங்க‌....

இந்த‌ க‌தை.....வ‌ழ‌க்க‌ம் போலில்லாம‌ல் ஏதோ ஒண்ணு மிஸ்ஸாகுது

//'என்ன உங்க லிஃப்ட்ல இன்னும் ஆவித்தொல்லை இருக்கா//

'லிஃப்ட்ல‌ இன்னும் ஆவித்தொல்லை'க்கு லிங்க் குடுத்திங்க‌ன்னா முத‌ல் முறை ப‌டிக்க‌ற‌வ‌ங்க‌ளுக்கு இன்ட்ர‌ஸ்டிங்கா இருக்கும். ஐயையோ! நான் சொன்ன‌து அந்த‌ ப‌திவுக்கு...ஆவித்தொல்லைக்கு இல்ல‌ ;)))

அவ‌ங்க‌ளைப் ப‌ற்றி குறிப்பிடும்போது 'மிஸ‌ஸ் கீதா குமார்'னு சொல்ல‌லாம். கூப்பிடும்போது கூட‌ 'சொல்லுங்க‌ மிஸ‌ஸ் கீதா, என்னாச்சு மிஸ‌ஸ் கீதா'ங்க‌ற‌து கொஞ்ஞ்ஞ்ச‌ம் செய‌ற்கையாயிருக்கு

DREAMER said...

வாங்க அநன்யா மஹாதேவன்,
வாழ்த்துக்கு மிக்க நன்றி!

வாங்க ரகு,
ஆஹா... ஷெர்லாக் ஹோம்ஸ்-டாக்டர் வாட்ஸன், கணேஷ்-வசந்த் இவங்களோட நம்ம நகுலன்-சதீஷா... மிக்க நன்றி!

ஆக்சுவலி நகுலனோட ப்ரொபஷன் பத்தி அவரே சொல்லிக்கிட்டா தற்பெருமையா இருக்குமோன்னு தோணுது... அதனாலதான் சதீஷ்-ங்கிற நண்பன் கேரக்டர் மூலமா கதை சொல்லிக்கிட்டிருக்கேன். டாக்டர் வாட்ஸன், ஹோம்ஸ் கதைகளை சொல்றமாதிரி! இந்த நடை கன்வீனியன்ட்டா இருக்கு!

நீங்க சொன்ன லிங்க் மற்றும் பெயர் உபயோகிப்பு மாற்றங்களை செய்துவிட்டேன்.
//'ஏதோ ஒண்ணு மிஸ்ஸிங்...//
அதை அடுத்தடுத்த கதைகள்ல பூரணப்படுத்திடுறேன்.

-
DREAMER

ரோகிணிசிவா said...

mm kalakreenga boss, intersting,
saudi la tamil books novels kidaikaatha kurai ellam ipo illavae illa ,nalla home work pandreenga, good luck

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

இப்போ எங்க ஊர்ல மணி ராத்திரி ஒண்ணு... தூக்கம் வரலைன்னு ப்ளாக் படிக்க வந்தேன்... உங்க கதைய படிச்சுட்டு தலை தூக்கி பாத்தா விண்டோல ஏதோ உருவம் தெரியற மாதிரி பீலிங்.... போதாததுக்கு பக்கத்துக்கு வீட்டு நாய் வேற கத்துது... தெய்வமே... இனிமே ராத்திரில உங்க ப்ளாக் பக்கமே வர மாட்டேன்... இப்படி மெரட்டுறீங்களே? (just curious, is this your real profession or just researching and wriiting as a hobby?)

DREAMER said...

நன்றி ரோகிணிசிவா,
உங்க நாவல்குறை தீர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி! உங்க கமெண்ட் படிச்சதும், இன்னும் நிறைய எழுதனும்போலிருக்கு!
//nalla home work pandreenga, good luck//
இதுக்கும் நன்றி! ஸ்கூல் படிக்கும்போதுதான் ஹோம்வர்க் பண்ணலை,இப்பவாவது பண்ணுவோமேன்னுதான்..!

வாங்க வப்பாவி தங்கமணி,
என்னது, உங்கவீட்டு ஜன்னல்ல அமானுஷ்ய உருவம் தெரியுதா..? சொல்லுங்க, நகுலனை அனுப்பி இன்வெஸ்டிகேட் பண்ண சொல்லுவோம்..! இது என்னோட ப்ரொஃபெஷன் இல்லைங்க. நான் சினிமாத்துறையில் இயக்குனராக கால்பதிக்க முயன்றுக்கொண்டிருப்பவன்! Just for story writing..!

-
DREAMER

http://maidenpost.wordpress.com/ said...

Eagerly waiting to see your movies....

சினிமா உலகம் உங்களை விரைவில் வரவேற்கட்டும்....

DREAMER said...

வாங்க அனு(maidenpost.wordpress.com),
விரைவில் வெள்ளித்திரையில் கதை சொல்கிறேன்..! வாழ்த்துக்கு மிக்க நன்றி!

-
DREAMER

வேங்கை said...

ஹரிஷ் இது உங்க கதைல ரொம்ப different
நல்ல முயற்சி ஹரிஷ்

ஒரு கேள்வி ஹரிஷ் ....அறிவியல்ல நீங்க சொல்லுறது இருக்கா?

DREAMER said...

வாங்க வேங்கை...
புது முயற்சியை அங்கீகரித்ததற்கு நன்றி...

இதுல சொல்லியிருக்கிற கோமா கோஸ்ட் வழக்குகள் உண்மையிலேயே நிறைய ரெக்கார்ட் ஆகியிருக்கு. நம்ம மதன் சார் எழுதின 'மனிதனும் மர்மங்களும்' புத்தகத்துல கூட ஒரு கேஸ் உதாரணத்துக்கு சொல்லலாம்... அதுபோன்ற சம்பவங்களை வச்சி பின்னப்பட்ட ஒரு கற்பனைக் கதைதான். ASTRAL PROJECTION என்பதும் Spiritual Science-ல் ஒரு முக்கிய அங்கம். Out of Body Experience என்று சொல்வார்கள் (நான் ட்ரை பண்ணதில்ல)

Anonymous said...

Very Well Haressh..

Ragu.

DREAMER said...

ThanQ Mr. Ragu..! Please visit Again..!

Anonymous said...

Arumai

Popular Posts